சீட்டுக் கிழித்தப்பின் சிக்கனமாய் இந்தியில்
கூட்டம் தலையெண்ணிக் குர்னாம்சிங்க் ஒட்டச்
சமொசாவும் கெட்டிலில் சாயுமாய் நாயர்
விமானம் பறக்குது பார்.
[ராயர் காபி கிளப் - இரா.முருகன் - பக்கம் 22]
சில ஆருடங்கள் பொய்த்துப் போவதில் எல்லாருக்கும் சந்தோஷமே. தக்காண ஏர்லைன்ஸ் பற்றி முருகன் எழுதியது மேலே. டெக்கான், கிங்பிஷர் ரெட்டாகி, மல்லையா கிங்பிஷர் ப்ராண்டையை அடகு வைத்து ரூ.2000 கோடி வாங்கி, வெட்டியாய் என்.டி.டி.வி குட் டைம்ஸ் நடத்தி, வருடக் கடைசியில் ’ராம் வாக்’கி, அசத்தல் அழகிகளாக எடுத்து, ஹவாயில் ஷூட் செய்து, காலண்டர் செய்து, விநியோகித்து, மால்களின் உயர்தர சலூன்களில், முலைக்காம்புகள் மட்டும் தெரியாமல், மற்றெல்லாம் தெரிய போஸ் கொடுக்கும் சுந்தரிகளை முடிவெட்டும் போது ஒரக்கண்ணால் கற்பழித்து, ரூ.300 மொய் எழுதி, வெளியே வந்தால் சென்னை வெயில் சுள்ளென்று முறைக்கிறது.
ஏர் ஏஷியா திருச்சி - கோலாம்பூர் விமானத்தில், கை முறுக்கு விற்காததுதான் பாக்கி. குறைவிலை விமானச் சேவைகள், கார்ப்பரேஷன் சாக்கடை கொசுக் குடும்பம் மாதிரி பரவி, இன்றைக்கு முழுச் சேவை விமான சேவைகளே குறைவிலை விமானச் சேவைகளோடு கட்டி தொழில் நடத்தவேண்டிய கட்டாயம். பொருளாதாரமும், பிஸினஸ் மாடல் மாற்றங்களும் எல்லாவற்றையும் மாற்றிவிடும். இதை வைத்துக் கொண்டு, ஜெர்க்கடிக்க Clayton Christensen-இன் Innovation Dillemma & Innovation Solution படிக்கலாம். Disruptive Innovation என்பதை தெரிந்துக் கொண்டால், மீட்டிங்களில் ஜல்லியடித்து, ஸ்ட்ராடஜி குழுவில் இணைந்து, ப்ரோமோஷன் வாங்கி, பேங்க் பாலன்ஸ் பெருக்கி, பின்னாளில் way back in 2010, i was the head of என்று விர்ட்சுவல் சுவர்களில் பேரன்களோடு கொஞ்சலாம். இப்போதைக்கு, நாஸ்ட்ராடாமஸ் இதை ஏற்கனவே சொன்னார் என்று சொல்லும் கும்பல் இணையத்தில் இருக்கும்; அவர்களோடு போய் சேர்ந்துக் கொள்ளலாம்.
முபாரக் ‘முபாரக்’ சொல்லாமல் ஒடிப் போனார். மக்கள் வெள்ளம், பிரமிடுகளை மறைத்தது என்று எதாவது தமிழ் தினசரியில் எழுதியிருப்பார்கள். கடாபி யார் மீது பழிப் போடலாம் என்று நாளொரு நியுஸும், பொழுதொரு பாமுமாய் எண்ணெய்க் கிணறுகளை நாசம் பண்ணத் திட்டம் போடுகிறார். லிபியர்கள் ரோட்டுக்கு வந்து கண்டதையெல்லாம் எரிக்கிறார்கள். துனிசியாவிலும், அல்ஜீரியாவிலும் பிரச்சனைகள். சுதந்திரம் என்பதின் எல்லைகள் என்னவென்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் இடதுசாரிகள், அறிவுஜீவிகள், ஆளுங்கட்சி எதிர்ப்பாளர்கள் எல்லாம், எகிப்தில் நடந்தது இந்தியாவிலும் நடக்க வேண்டும் என்று கனவு காண்கிறார்கள். சிரிப்பதா, அழுவதா தெரியவில்லை. எகிப்தின் வெற்றிக்குப் பின், எல்லாரும் தாங்களும் சுதந்திரமடைந்தால் சுபிட்சமாகிவிடுமோம் என்கிற கனவில் அல்லாஹூ அக்பர் கோஷத்தோடு, கொடிப் பிடிக்கிறார்கள்.
எங்களுடைய பக்கத்து ஊரிலும் இப்படித்தான் நடந்தது. தீர்க்கமான ஒருவர் தன் மக்களுக்காக, சண்டைப் போட்டு, பிரித்து வாங்கிக் கொண்டு லிபரல் இஸ்லாமிய தேசமாக்க முயற்சித்தார். அவர் மண்டையைப் போட்டு, பின் வந்தவர்கள் அப்பம் பிடுங்கின கதையாய் முயற்சித்து, ராணுவத்தின் கீழ்ப் போய், இன்று வரைக்கும் விளங்காமலேயே வாழ்ந்துக் கொண்டிருக்கிறது - பாகிஸ்தான். சர்தாரிகள் எதற்கும் ஜவாப்தாரிகள் இல்லை போலும். கோர்ப்பசேவின் பெத்ரோஸ்ய்கா-யும், பின் தூங்குமூஞ்சி எல்ஸ்டினின் கட்டற்ற சுதந்திரமும், அலிகார்ஜ்களின் (Oligarch)பங்குப் போடலும், பின்னால் அலிகார்ஜ்கள் பிடிக்காத கே.ஜி.பியிலிருந்து வந்த விளாதிமிர் புதினின் இரும்பு கரமும், ஜால்ரா மெடவடேவும் - அன்றிலிருந்து இன்று வரை ரஷ்யாவில் ’சுதந்திரம்’ படும் பாட்டை யாரும் கண்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. எகிப்தின் கோஷம் முபாரக் ஒழியவேண்டும். ஒழிந்தபின் என்ன? யாரும் யோசித்தாகத் தெரியவில்லை. இப்போது கட்டுப்பாடு ராணுவத்தின் கீழிருக்கிறது. History hopefully not repeats itself.
கோவாவில் மகேஷ் பூபதி - லாரா தத்தா திருமணம் நடந்து முடிந்தது. லாரா தத்தாவை எப்படி உலக அழகியாக்கினார்கள் என்பது வரலாற்றுப் பிரச்சனை. ஒரு ஹிட் கூட எனக்கு தெரிந்து லாரா தத்தா இந்தியில் தரவில்லை. மொக்கை சல்மான் படங்களில் வந்ததுதான் ஒரே தகுதி. பாலிவுட் எப்படி இயங்குகிறது என்று புரியவே இல்லை. ஹ்ரித்திக் ரோஷன் வரும் ஒரு டிவி நிகழ்ச்சிக்கு எபிசோடுக்கு ரூ.2கோடி சம்பளமாம். திங்கள் முதல் வியாழன் வரை எல்லோரும், வெள்ளி முதல் ஞாயிறு வரை நடக்கும் யார் பார்ட்டிக்கு போக வேண்டும் என்கிற திட்டத்திலேயே இருப்பார்கள் போல. ரஜினி ரசிகர்களை நக்கலடிக்கும் அறிவுஜீவிகள் ஒரு எட்டு மும்பைக்குப் போய் வருதல் நலம்.
சரி தத்தாவுக்கு வருவோம். சுஷ்மிதா சென் - ஐஸ்வர்யா ராய் ஆண்டிகளுக்கு பின்னாடி வந்த அழகிகளில், டயானா ஹேடனுக்கு சற்று மேலே இருக்கிற ஒரேக் காரணத்தால் இந்தியில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். ஒரு வேளை திரையில் பார்க்காத வேறு தகுதிகள் இருக்கக்கூடும். லியாண்டரோடு டூ விட்டு, இப்போது தான் மீண்டும் சேர்ந்திருக்கிறார் மகேஷ் பூபதி. ஏற்கனவே மணமுறிவானவர். முதல் மணம் சென்னையைச் சேர்ந்த மாடல் ஸ்வேதா ஜெய்சங்கரோடு. இப்போது லாரா தத்தாவோடு. இந்த மாதிரி பிரபலங்கள் மணம் செய்தலும், பின் விலகுதலும் சாதாரணமாய் நடக்கிறது. மத்தியத்தர வர்க்கம் தான், திருமணங்களை செதுக்கிய சிற்பங்கள் மாதிரி நீண்டநாள் தாங்கும் சமாச்சாரமாய் பார்க்கிறது. pre-nupital agreement-டோடு தான் மோதிரமோ, தாலியோ மாற்றும் காலமிது. இணையாய் வாழ்ந்தால் சரி. ஸ்வெதா? அவருக்கும் ஒரு தொழிலதிபருக்கும் அதே போன வாரம் திருமணம் நடந்தது. நாராசமாய் கவுண்டமணியின் ‘தொழிலதிபர்’ கமெண்ட் நினைவுக்கு வந்துத் தொலைக்கிறது.
ட்வீட்டரில் ஏழை, ஏழ்மைப் பற்றி 4 வரி எழுதியதற்கு நண்பர்கள் பாய்ந்து விட்டார்கள். நண்பர் அனாதை ஆனந்தன் நியுயார்க் டைம்ஸ் சுட்டிக் கொடுத்து இந்தியாவில் குழந்தைகள் குறைச்சத்தோடு இருக்கிறது என்றார். இன்னும் சில நண்பர்கள், முதலாளித்துவ அடிவருடி என்றும், மாமல்லன் பொலிடிக்கல் கரெக்ட்னெஸுக்கு எதிர் இன்சென்சிடிவிடியா எனக் கேள்விக் கேட்டார். முதலில் இந்த ‘நான் கடவுள்’ செண்டிமெண்டிலிருந்து வெளியே வருவோம். நான் இந்தியாவில் ஏழைகள் இல்லையென்றோ, ஏழ்மையே இல்லையென்றோ சொல்லவில்லை. நாம் தேவையில்லாமல், ஏழ்மையை romanticize பண்ணிக் கொண்டிருக்கிறோம்.
துலாப்பாரத சாரதா ரேஞ்சுக்கு பீல் பண்ணத் தேவையில்லை. நாம் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டில் 30 வருடங்களில் ஒரு பட்டினி சாவும் இல்லை. இந்தியாவில் சாப்பாடு போகாத இடங்களிலெல்லாம் செல்போனும், சாடிலைட் டிவியும் போய் விட்டது. வேலையில்லை என்று இன்று எந்த மெட்ரோவிலும் கதைவிட முடியாது. கொஞ்சம் கிராமப்பக்கம் போய்க் கேட்டால், NREGAவுக்குப் பிறகு, நடவுக்கு, அறுவடைக்கும் ஆட்கள் இல்லையென்று புலம்புகிறார்கள். பஜாஜ் பல்சரும், டிவிஎஸ் அபாச்சியும் செம்மண் சாலைகள் மிதித்து நாட்களாகின்றன. மார்க்சீயர்களும், அறிவுஜீவுகளும் தெருமுனைக் கூட்டங்கள் போட்டு எளிமையும், வளமையும் பற்றிப் பேசட்டும். எனக்கு என் ப்ளாஸ்மா டிவியும், கிரிக்கெட்டும், ரியால்டி ஷோக்களும் முக்கியம். கம்யுனிஸம் பேசும் காம்ரேட்டுகள், ரஷ்யாவைப் பாருங்கள். சீனாவைப் பாருங்கள். ரஷ்யர்களே லெனின்கிராடினை பீட்டர்ஸ்பர்காக மாற்றி மெக்டோனல்ட்ஸும், கேப் கடைகளுமாக மாற்றி விட்டார்கள். இதனால், இந்தியாவில் சுரண்டல் இல்லை; மொள்ளமாரித்தனமில்லை; இந்தியா ஒளிர்கிறது என்று அர்த்தமில்லை. மார்க்ஸியர்களும், மாவோயிஸ்டுகளும் போகாத இடங்களில் கூட மீடியா போய்விட்டது. இனி ஏழ்மையை அதுப் பார்த்துக் கொள்ளும்.
சனிதோறும் ஒரு பத்தி
Showing posts with label இந்தியா. Show all posts
Showing posts with label இந்தியா. Show all posts
February 25, 2011
June 13, 2009
சனிமூலை - 008
நடுவில் ஆறு வாரங்களாக காணவில்லை. எழுதவில்லையே என்று நிறைய பேர் கேள்வி கேட்டார்கள். யாரும் மடல் அனுப்பவில்லை. பிஸியாக இருந்தேன், இல்லை மூடு இல்லை என்றெல்லாம் எழுதலாம். ஆனால் உண்மையில், நானெடுத்து எழுதுவதற்கு தோதான செய்திகள் எதுவும் அமையவில்லை என்பது தான் உண்மை.
பங்குச்சந்தை எகிறுகிறது. என்.டி.டி.வி ப்ராபிட், சி.என்.பி.சி டிவி 18 எல்லாம், கிராப்கள் காண்பிக்கிறார்கள். ஒரு பெரிய புள்ளி விவர புயலே தாக்கிக் கொண்டிருக்கிறது. டைம்ஸ் ஆப் இந்தியாவில் அங்கலேஷ் அய்யர், மத்திய வங்கியின் வெளிநாட்டு முதலீடு டேட்டாவினை வைத்துக் கொண்டு வாரத்துக்கு ஒரு பில்லியன் டாலர்கள் இந்தியாவுக்கு வருகிறது என்று கீபோர்ட்டிலேயே குதிக்கிறார். தினமும் எதாவது ஒரு அமைச்சர் புதிய திட்டங்கள், மானியங்கள், சலுகைகள் பட்ஜெட்டில் வரும் என்று டீசர் கொடுக்கிறார்கள்.
காங்கிரஸ் பெருபான்மை பலத்தோடு வென்றாலும், வென்றது. அவரவர்கள் கொடுக்கும் பில்ட்-அப்புகளுக்கு அளவேயில்லாமல் போய்விட்டது. மன்மோகன் சிங் ஆட்சியமைப்பார் என்று சொன்ன விடனேயே 2000 புள்ளிகள் ஏறி மே.18 அன்று பங்குச்சந்தைக்கு விடுமுறை. டாட்.காம் காலத்தில் ஆலன் கீரின்ஸ்பேன், இதற்கு ஒரு அழகான வார்த்தை சொல்லியிருப்பார்.Irrational exuberance.இந்தியாவில் அதுதான் நடக்கிறது இப்போது.
அடிப்படை விஷயங்களில் எவ்விதமான மாற்றங்களும் இல்லாத போது, இம்மாதிரியான ஜீபும்பா வேலைகள் எந்தளவிற்கு சாத்தியம் என்று யாரும் யோசித்தாற்போல தெரியவில்லை. பணவீக்கம் குறைந்திருக்கிறது, சுழிக்கு அருகாமையில் வந்து விட்டோம் என்று நாளிதழ்கள் சொல்கின்றன. அப்படியென்றால், ஏறின பொருட்களின் விலை இறங்கியிருக்க வேண்டுமே? ஏன் இறங்கவில்லை? வேலை வாய்ப்புகள் அதிகரித்து இருக்க வேண்டுமே? அது நடக்கவில்லையே? ஏன் ? உண்மை நிலவரம் என்னவென்றால், எல்லா முன்னேறி வரும் நாடுகளுக்கும் இப்போது பணம் வெள்ளமாய் பாய்கிறது. இந்த பணம், அமெரிக்கா அச்சடித்த பணம். எவ்விதமான பின்விளைவுகளின் பாதிப்புகளையும் பற்றி கவலைப்படாமல், தாராளா தொண்டியாய், அமெரிக்கா டாலரை அச்சடித்து கொண்டு, ஜி.எம்மையும், செத்துப் போன வங்கிகளையும் வாங்கிக் கொண்டிருக்கிறது. பொருளாதார பாஷையில் இதற்கு “quantitative easing" என்று பெயர். இதன் விளைவு 2012க்கு பின்னால் தெரியும். இப்போது அதன் பாதகங்கள் புரியாது.
இந்த மாதிரி அச்சடித்து புழக்கத்துக்கு விடும்போது, முதலில் எல்லாம் செளஜன்யமாக தான் இருக்கும். அதிக பணப்புழக்கத்தினால், மீண்டும் பணவீக்கம் ஏற தொடங்கும். ஏனெனில், இது கடினமாய் உற்பத்தியினை பெருக்குவதால் உள் வரும் பணமல்ல. இது Easy Money. பவர்பாயிண்ட், எக்செஸ் தாள்களில் போடப்பட்ட ப்ரொஜக்ஷன்களை அடிப்படையாகக் கொண்டு உள் வரும் பணம். அதனால் தான். ஐ.எம்.எப். 400 டன் தங்கத்தினை சர்வதேச சந்தையில் இறக்கும் என்று தெரிந்தாலும், தங்கத்தின் விலை ஏறிக் கொண்டிருக்கிறது. கடந்த 45 நாட்களில் $1000/oz தொட்டு தொட்டு கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்கிறது.
நிஜம் என்னவென்றால், மந்த நிலையின் பாதிப்பு இனிமேல் தான் அதிகமாகும். வளர்ந்த நாடுகளின் உற்பத்தி குறையும். மக்கள் வேலையில்லாமல் திண்டாடுவார்கள். இப்போது ஒடிக் கொண்டிருப்பது சந்தை மொழியில் Bear market rally.இதனை இதே நிலையில் தாக்கு பிடிப்பது கடினம். உங்களைச் சுற்றி பார்த்தாலே, டிவி சேனல்கள் நம் காதில் எவ்வளவு பெரிய மாலையினை போட்டு நமக்கு மங்களம் பாட முயற்சிக்கிறார்கள் என்று தெரியும். இதில் தரகர்களுக்கு தான் லாபம். இதன் மூலம், ஒட்டு மொத்தமாக, நாம் எல்லாரும் மண்ணுக்குள் போகப் போகிறோம் என்கிற பெஸிமிஸ்ட் பார்வையல்ல.
நம் பயங்கள் குறைந்திருக்கின்றன. நிறுவனங்கள் இனிமேல் தங்களுடைய சேவை தேவைகள்/உற்பத்தி கீழே போகாது என்று நம்புகின்றனர்.வலிமையான அரசு. பொங்கும் பங்குச்சந்தை. பரவலான உள்ளூர் சந்தை என்று பல காரணிகள் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கின்றன.
ஜிம் ரோஜர்ஸ், சொரோஸ் போன்ற விற்பனர்களின் பார்வையில், இந்தியாவும் சீனாவும் தான் இந்த மந்த நிலையிலிருந்து வெளிவரும் முதலிரு நாடுகளாக இருக்கும் என்று சொல்கிறார்கள். ப்ரிக் நாடுகளில் இந்தியாவும், பிரேசிலும் தான் முதலிடத்தினை பிடிக்க ஒடிக் கொண்டிருக்கின்றன.
ஆக இந்த நம்பிக்கை தான் வாழ்க்கை. இப்போதைக்கு உங்களின் பர்ஸினை கெட்டியாக பிடித்திருங்கள்.
தொழில் நிமித்தமாக 2-3 வாரங்களுக்கு முன்பு, தமிழ் சினிமாவின் மிக முக்கியமான தயாரிப்பாளாரான “ஆஸ்கார்” ரவிச்சந்திரனை சந்தித்தேன். மனிதர் மிக மிக சாதாரணமாக இருக்கிறார். டிவி சீரியல் நடிகர்களே ஹோண்டா சிட்டியும், ஹுண்டாய் ஆக்செண்ட்டுமாய் செட்டுக்கு வருகையில், வெறுமனே ஒரு i10 வைத்திருக்கிறார். ஒரு லீ டீ சர்ட், சாதாரண ஜீன்ஸ் என உள்ளே வந்தார்.
ஆழ்வார்பேட்டை அனுமார் கோயில் காலையில் போகவில்லை, அதனால் பரிகாரமாக 500 சுற்றுகள் சுற்றிவிட்டு வந்தேன், அதான் லேட்டு என்று தன்னிலை விளக்கம். மனிதருக்கு அசாத்திய கடவுள் நம்பிக்கை. கார் வைத்திருப்பதே திருப்பதி போவதற்கு தான் என்கிற தொனியிலான விளக்கத்தினை இப்போது தான் கேட்கிறேன். ஆஸ்கார் பிலிம்ஸ் ஒரு தனி நபர் கார்ப்பரேஷன். ரவிச்சந்திரனோடு அவர் சகோதரர்கள் எல்லாரும் பங்குதாரர்களே. 85% படங்கள் வெற்றிப் படங்கள்.
ரவிச்சந்திரன் எடுப்பது தான் இறுதி முடிவு. பல நடிகர்கள், இயக்குநர்கள் பற்றியெல்லாம் பேசி கொண்டிருந்தோம். ரவிச்சந்திரனின் முதல் சினிமா நுழைவு வேலூரில் “வானம்பாடி” படத்தினை 37வது தடவையாக எடுத்து திரையரங்கத்தில் போட்டது. அவர் போட்ட ஒரு வாரம் செம கல்லா. அங்கிருந்து ஆரம்பித்து, இன்றைக்கு ஜாக்கி சானை வைத்து ஒரு படமெடுக்கிறார் - 6 மொழிகளில் வர இருக்கிறது. இது தாண்டி, முருகதாஸ் நன்றிக் கடனுக்காக “ரமணா”வினை ஹிந்தியில் இவருக்காக இயக்குகிறார். இன்னமும் இரண்டு படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன. மிக அபூர்வமாக இவ்வளவு பணமிருந்தும் [தசாவதாரம் சம்பாதித்தது 200 கோடிகள்] மிக மிக down-to-earth ஆக இருக்கும் ஒரு நபரினை இப்போது தான் பார்க்கிறேன். வழக்கமாக ரஜினிக்கு தான் இம்மாதிரியான வர்ணணைகள் பொருந்தும்.
மிக எளிமையாக இருக்கும் அவரின் வியாபார யுக்திகள், நேற்றைய சாண்டோ சின்னப்பா தேவரினை நினைவுப் படுத்துகின்றன. ஒரு தனி நபர் என்கிற முறையில், ரவிச்சந்திரன் மிக நல்லவர். ஆனால் நிறுவனம் என்கிற வகையில் ஆஸ்கார் ஒரு பெரிய பெயிலியர்.
இந்த வார செய்கைகள்
படித்தது: பா.ராவின் “பிரபாகரன்: வாழ்வும் மரணமும்”
பிடித்தது: வோடாபோன் விளம்பரத்தில் வரும் சூசூக்கள்(Zoozoo)
கேட்டது: “என்னடா பாண்டி, இன்னா பண்ண போறே” இளையராஜாவின் ரஸ்டிக் குரலில் “வால்மீகி” பாடல்
பார்த்தது: திருவல்லிக்கேணி ரத்னா கபேயில் ”கடவுள் பாதி.மிருகம் பாதி” ஜெகன்
பங்கேற்றது: கிழக்கு மற்றும் Fundsindia.com இணைந்து நடத்திய "பேரங்கள் மற்றும் ரிவார்டு பாயிண்டுகள்” கலந்துரையாடல்
வாங்கியது: ரிச்சர்ட் தேலரின் “Nudge: Improving Decisions about Health,Wealth and Happiness
முணுமுணுப்பது: ”இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை” - டி.ஆர். மகாலிங்கம்
வெறுப்பது: இன்னமும் anyindian.com-இல் “விதுர நீதி” புத்தகம் இல்லாமலிருப்பது
கொலை வெறியோடு இருப்பது: சென்னையில் ஓடும் ஆட்டோக்கள்
பங்குச்சந்தை எகிறுகிறது. என்.டி.டி.வி ப்ராபிட், சி.என்.பி.சி டிவி 18 எல்லாம், கிராப்கள் காண்பிக்கிறார்கள். ஒரு பெரிய புள்ளி விவர புயலே தாக்கிக் கொண்டிருக்கிறது. டைம்ஸ் ஆப் இந்தியாவில் அங்கலேஷ் அய்யர், மத்திய வங்கியின் வெளிநாட்டு முதலீடு டேட்டாவினை வைத்துக் கொண்டு வாரத்துக்கு ஒரு பில்லியன் டாலர்கள் இந்தியாவுக்கு வருகிறது என்று கீபோர்ட்டிலேயே குதிக்கிறார். தினமும் எதாவது ஒரு அமைச்சர் புதிய திட்டங்கள், மானியங்கள், சலுகைகள் பட்ஜெட்டில் வரும் என்று டீசர் கொடுக்கிறார்கள்.
காங்கிரஸ் பெருபான்மை பலத்தோடு வென்றாலும், வென்றது. அவரவர்கள் கொடுக்கும் பில்ட்-அப்புகளுக்கு அளவேயில்லாமல் போய்விட்டது. மன்மோகன் சிங் ஆட்சியமைப்பார் என்று சொன்ன விடனேயே 2000 புள்ளிகள் ஏறி மே.18 அன்று பங்குச்சந்தைக்கு விடுமுறை. டாட்.காம் காலத்தில் ஆலன் கீரின்ஸ்பேன், இதற்கு ஒரு அழகான வார்த்தை சொல்லியிருப்பார்.Irrational exuberance.இந்தியாவில் அதுதான் நடக்கிறது இப்போது.
அடிப்படை விஷயங்களில் எவ்விதமான மாற்றங்களும் இல்லாத போது, இம்மாதிரியான ஜீபும்பா வேலைகள் எந்தளவிற்கு சாத்தியம் என்று யாரும் யோசித்தாற்போல தெரியவில்லை. பணவீக்கம் குறைந்திருக்கிறது, சுழிக்கு அருகாமையில் வந்து விட்டோம் என்று நாளிதழ்கள் சொல்கின்றன. அப்படியென்றால், ஏறின பொருட்களின் விலை இறங்கியிருக்க வேண்டுமே? ஏன் இறங்கவில்லை? வேலை வாய்ப்புகள் அதிகரித்து இருக்க வேண்டுமே? அது நடக்கவில்லையே? ஏன் ? உண்மை நிலவரம் என்னவென்றால், எல்லா முன்னேறி வரும் நாடுகளுக்கும் இப்போது பணம் வெள்ளமாய் பாய்கிறது. இந்த பணம், அமெரிக்கா அச்சடித்த பணம். எவ்விதமான பின்விளைவுகளின் பாதிப்புகளையும் பற்றி கவலைப்படாமல், தாராளா தொண்டியாய், அமெரிக்கா டாலரை அச்சடித்து கொண்டு, ஜி.எம்மையும், செத்துப் போன வங்கிகளையும் வாங்கிக் கொண்டிருக்கிறது. பொருளாதார பாஷையில் இதற்கு “quantitative easing" என்று பெயர். இதன் விளைவு 2012க்கு பின்னால் தெரியும். இப்போது அதன் பாதகங்கள் புரியாது.
இந்த மாதிரி அச்சடித்து புழக்கத்துக்கு விடும்போது, முதலில் எல்லாம் செளஜன்யமாக தான் இருக்கும். அதிக பணப்புழக்கத்தினால், மீண்டும் பணவீக்கம் ஏற தொடங்கும். ஏனெனில், இது கடினமாய் உற்பத்தியினை பெருக்குவதால் உள் வரும் பணமல்ல. இது Easy Money. பவர்பாயிண்ட், எக்செஸ் தாள்களில் போடப்பட்ட ப்ரொஜக்ஷன்களை அடிப்படையாகக் கொண்டு உள் வரும் பணம். அதனால் தான். ஐ.எம்.எப். 400 டன் தங்கத்தினை சர்வதேச சந்தையில் இறக்கும் என்று தெரிந்தாலும், தங்கத்தின் விலை ஏறிக் கொண்டிருக்கிறது. கடந்த 45 நாட்களில் $1000/oz தொட்டு தொட்டு கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்கிறது.
நிஜம் என்னவென்றால், மந்த நிலையின் பாதிப்பு இனிமேல் தான் அதிகமாகும். வளர்ந்த நாடுகளின் உற்பத்தி குறையும். மக்கள் வேலையில்லாமல் திண்டாடுவார்கள். இப்போது ஒடிக் கொண்டிருப்பது சந்தை மொழியில் Bear market rally.இதனை இதே நிலையில் தாக்கு பிடிப்பது கடினம். உங்களைச் சுற்றி பார்த்தாலே, டிவி சேனல்கள் நம் காதில் எவ்வளவு பெரிய மாலையினை போட்டு நமக்கு மங்களம் பாட முயற்சிக்கிறார்கள் என்று தெரியும். இதில் தரகர்களுக்கு தான் லாபம். இதன் மூலம், ஒட்டு மொத்தமாக, நாம் எல்லாரும் மண்ணுக்குள் போகப் போகிறோம் என்கிற பெஸிமிஸ்ட் பார்வையல்ல.
நம் பயங்கள் குறைந்திருக்கின்றன. நிறுவனங்கள் இனிமேல் தங்களுடைய சேவை தேவைகள்/உற்பத்தி கீழே போகாது என்று நம்புகின்றனர்.வலிமையான அரசு. பொங்கும் பங்குச்சந்தை. பரவலான உள்ளூர் சந்தை என்று பல காரணிகள் இந்தியாவுக்கு சாதகமாக இருக்கின்றன.
ஜிம் ரோஜர்ஸ், சொரோஸ் போன்ற விற்பனர்களின் பார்வையில், இந்தியாவும் சீனாவும் தான் இந்த மந்த நிலையிலிருந்து வெளிவரும் முதலிரு நாடுகளாக இருக்கும் என்று சொல்கிறார்கள். ப்ரிக் நாடுகளில் இந்தியாவும், பிரேசிலும் தான் முதலிடத்தினை பிடிக்க ஒடிக் கொண்டிருக்கின்றன.
ஆக இந்த நம்பிக்கை தான் வாழ்க்கை. இப்போதைக்கு உங்களின் பர்ஸினை கெட்டியாக பிடித்திருங்கள்.
தொழில் நிமித்தமாக 2-3 வாரங்களுக்கு முன்பு, தமிழ் சினிமாவின் மிக முக்கியமான தயாரிப்பாளாரான “ஆஸ்கார்” ரவிச்சந்திரனை சந்தித்தேன். மனிதர் மிக மிக சாதாரணமாக இருக்கிறார். டிவி சீரியல் நடிகர்களே ஹோண்டா சிட்டியும், ஹுண்டாய் ஆக்செண்ட்டுமாய் செட்டுக்கு வருகையில், வெறுமனே ஒரு i10 வைத்திருக்கிறார். ஒரு லீ டீ சர்ட், சாதாரண ஜீன்ஸ் என உள்ளே வந்தார்.
ஆழ்வார்பேட்டை அனுமார் கோயில் காலையில் போகவில்லை, அதனால் பரிகாரமாக 500 சுற்றுகள் சுற்றிவிட்டு வந்தேன், அதான் லேட்டு என்று தன்னிலை விளக்கம். மனிதருக்கு அசாத்திய கடவுள் நம்பிக்கை. கார் வைத்திருப்பதே திருப்பதி போவதற்கு தான் என்கிற தொனியிலான விளக்கத்தினை இப்போது தான் கேட்கிறேன். ஆஸ்கார் பிலிம்ஸ் ஒரு தனி நபர் கார்ப்பரேஷன். ரவிச்சந்திரனோடு அவர் சகோதரர்கள் எல்லாரும் பங்குதாரர்களே. 85% படங்கள் வெற்றிப் படங்கள்.
ரவிச்சந்திரன் எடுப்பது தான் இறுதி முடிவு. பல நடிகர்கள், இயக்குநர்கள் பற்றியெல்லாம் பேசி கொண்டிருந்தோம். ரவிச்சந்திரனின் முதல் சினிமா நுழைவு வேலூரில் “வானம்பாடி” படத்தினை 37வது தடவையாக எடுத்து திரையரங்கத்தில் போட்டது. அவர் போட்ட ஒரு வாரம் செம கல்லா. அங்கிருந்து ஆரம்பித்து, இன்றைக்கு ஜாக்கி சானை வைத்து ஒரு படமெடுக்கிறார் - 6 மொழிகளில் வர இருக்கிறது. இது தாண்டி, முருகதாஸ் நன்றிக் கடனுக்காக “ரமணா”வினை ஹிந்தியில் இவருக்காக இயக்குகிறார். இன்னமும் இரண்டு படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன. மிக அபூர்வமாக இவ்வளவு பணமிருந்தும் [தசாவதாரம் சம்பாதித்தது 200 கோடிகள்] மிக மிக down-to-earth ஆக இருக்கும் ஒரு நபரினை இப்போது தான் பார்க்கிறேன். வழக்கமாக ரஜினிக்கு தான் இம்மாதிரியான வர்ணணைகள் பொருந்தும்.
மிக எளிமையாக இருக்கும் அவரின் வியாபார யுக்திகள், நேற்றைய சாண்டோ சின்னப்பா தேவரினை நினைவுப் படுத்துகின்றன. ஒரு தனி நபர் என்கிற முறையில், ரவிச்சந்திரன் மிக நல்லவர். ஆனால் நிறுவனம் என்கிற வகையில் ஆஸ்கார் ஒரு பெரிய பெயிலியர்.
இந்த வார செய்கைகள்
படித்தது: பா.ராவின் “பிரபாகரன்: வாழ்வும் மரணமும்”
பிடித்தது: வோடாபோன் விளம்பரத்தில் வரும் சூசூக்கள்(Zoozoo)
கேட்டது: “என்னடா பாண்டி, இன்னா பண்ண போறே” இளையராஜாவின் ரஸ்டிக் குரலில் “வால்மீகி” பாடல்
பார்த்தது: திருவல்லிக்கேணி ரத்னா கபேயில் ”கடவுள் பாதி.மிருகம் பாதி” ஜெகன்
பங்கேற்றது: கிழக்கு மற்றும் Fundsindia.com இணைந்து நடத்திய "பேரங்கள் மற்றும் ரிவார்டு பாயிண்டுகள்” கலந்துரையாடல்
வாங்கியது: ரிச்சர்ட் தேலரின் “Nudge: Improving Decisions about Health,Wealth and Happiness
முணுமுணுப்பது: ”இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை” - டி.ஆர். மகாலிங்கம்
வெறுப்பது: இன்னமும் anyindian.com-இல் “விதுர நீதி” புத்தகம் இல்லாமலிருப்பது
கொலை வெறியோடு இருப்பது: சென்னையில் ஓடும் ஆட்டோக்கள்
Subscribe to:
Comments (Atom)